வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுங்கள் – இலங்கையின் செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி கோரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/625.500.560.350.160.300.053.800.900.160.90-1-6.jpg)
கொரோனா நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிலுள்ன செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் ஒட்சிசனுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் அதிகளவில் தேவைப்படுவாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் தங்களது பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளுடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்குமாறு செல்வந்தர்களிடம் அமைச்சர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாபரிப்புப் பணம் செலுத்தாத நபருக்கு 38 மாதங்கள் சிறை!
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!
போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த அவதானம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது - 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அம...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகின்றது வர்த்த...