வேலணை பிரதேச அபிவிருத்திக்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!

வேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் சபையினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி தலைமையில் நேற்றையதினம் (28) நடைபெற்றது.
இதன்போது அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நிறுத்தி சபையின் உறுப்பினர்களால் பல முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இவை தொடர்பில் குறித்த சபை அமர்வில் விவாதிக்கப்பட்டு வேலணை பிரதேச சபையால் அடுத்த ஆண்டுக்கான அபிவிருத்தி பணிப்பாக 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தேரிவித்தார்.
Related posts:
அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செ...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் புதிதாக வர்த்தமானி!
கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை - சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அ...
|
|