வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் – கல்வி அமைச்சர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/image_82cd087f47.jpg)
வடமாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வடக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள இடரால் பாடசாலை மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சீருடைகள் பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் மற்றும் சீருடைகள் என்பன வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related posts:
சொந்த இடங்களில் இயங்க தயாராகும் யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி!
நாட்டில் மீண்டும் இடைக்கிடையே மின்வெட்டு - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!
காரணமின்றி அதிக கட்டணங்கள் அறவீடு - நிவாரணம் வழங்குமாறு மின்சாரத்துறைக்கு பரிந்துரை!
|
|