வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/09/AIRPORT-700x375-1.jpg)
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதிய வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 18வயதிற்கும் 59வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு ‘மனுஷம்’ என்ற பெயரில் புதிய ஓய்வூதியதிட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் இந்த காப்புறுதி திட்டத்திற்குள் உள்ளடங்குவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒரு தொகுதிஅகதிகள் இந்தியாவிலிருந்து இன்று நாடு திரும்புகின்றனர்!
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் - இராணுவ ...
மோசடி வியாபாரிகளால்தான் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டு!
|
|