விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம் – விவசாயத்துறை அமைச்சு தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/09/images-9.jpg)
விலங்கு உணவை, அத்தியாவசிய பொருளாக அறிவிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மிருகவள, விவசாய நில மேம்பாடு, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், விவசாயத்துறை அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்குணவுகளின் விலை அதிகரிக்கின்றமையால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களே இந்த தீர்மானத்திற்கு காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எச்சரிக்கை : வருகிறது மர்ம தொலைபேசி அழைப்பு!
குப்பையின் மூலம் மின்உற்பத்தி திட்டம் ஆரம்பம்!
கட்டாய பாடமாகிறது சுகாதாரம் : அமைச்சரவை அனுமதி
|
|