வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பம்!

நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 7% வலுவடைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் 3% வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|