வறட்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இராணுவ உதவி – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Saturday, October 8th, 2016

 

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவத்தினர் அந்தந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வெலிகந்த, திம்புலாக, லங்காபுர, தமன்கடுவ, மெதகிரிய மற்றும் ஹிங்குராங்கொட போன்ற பகுதிகளில் நீரி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொலன்னருவை மற்றும் மெதகிரிய போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வறட்சி காலநிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் வழங்கி வரும் உதவியால் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் அன்றாடம் தேவையான நீரினை பெற்றுக்கொள்ள முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20121219-062307

Related posts:


வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீப...
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் - இத்தாலியில் வாழும் இல...
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணைகளின் முடிவின் பிரகாரம் குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்...