வடக்கின் தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/images-1-3.jpg)
வடக்கு மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டம் உள்ளட்ட திர்மானங்களை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையை வழங்குதல் ஆகியன ஆபத்தானவை என நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மொழியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டங்கள் பாதகமான நிலைமையையே ஏற்படுத்தும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Related posts:
“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” - தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும்...
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் - மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே தீர்மானிக்...
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க நடவடி...
|
|