வடக்கின் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் வெளிமாவட்ட ஊழியர்கள் நியமிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/07/625.300.560.350.160.300.053.800.450.160.90.jpg)
யாழ்ப்பாணம் மின்சாரசபையின் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்ற தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் நியமனமும், பணிப் பொறுப்பேற்பும் இரகசியமாக நடந்து முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த நான்கு தினங்களின் முன்னர் இலங்கை மின்சாரசபையின் யாழ் அலுவலகத்தில் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் சிங்களவர்கள். இருவரே தமிழர்கள்.
இதேவேளை வடக்கில் பல இளைஞர், யுவதிகள் பட்டதாரிகளாகவும், உரிய கல்வித்தகுதியுடனும் வேலையற்று இருக்கின்ற நிலையில் பிறமாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் - அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம...
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
சந்தை வட்டி விகிதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!
|
|