ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!

நாடு முழுவதுமுள்ள 53 ரயில் நிலையங்களில் 89 Wi-Fi வலயங்களை நிறுவுவதற்கு இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் 44 Wi-Fi வலயங்கள் நிறுவப்படவுள்ளதுடன், அவற்றில் 22 Wi-Fi வலயங்கள் கொழும்பு மாவட்டத்தில் 14 ரயில் நிலையங்களில் நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், குறித்த இந்த திட்டத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் ரம்புக்கணை ரயில் நிலையம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் வடமேல் மாகாணத்தில் 5 ரயில் நிலையங்களும் பதுளை மாவட்டத்தில் 5 ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய ஆசிரியர்களை மலையகத்தில் அனுமதியளித்தால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம் - ஒரே நாளில் 63 பேருக்கு தொற்று உறிதிப்படுத்தப்பட்டது!
மேலும் 18 பேருக்கு கொரோனா.தொற்று உறுதி – இலங்கையின் எண்ணிக்கை 823 ஆக உயர்வு!
|
|