ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!

Sunday, February 24th, 2019

ரயில்களில் பெண்களுக்கு பிரத்தியேகமாக தனியான பெட்டிகளை ஒதுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினத்தன்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக, 6 அலுவலக ரயில்களில் பெண்களுக்கான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன.

சமுத்திராதேவி, சாகரிக்கா உள்ளிட்ட 6 அலுவலக ரயில்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், பெண்களுக்காக மாத்திரம் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் எழுந்த பிரச்சினைகள் காரணமாக அந்நடைமுறை கைவிடப்பட்டது.

Related posts:


கொரோனா கால பொது போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் – செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பத...
உள்ளூராட்சி தேர்தலுக்காக 7,000 கண்காணிப்பாளர்கள் கடமையில் - தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தகவல்!