ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!

ரயில்களில் பெண்களுக்கு பிரத்தியேகமாக தனியான பெட்டிகளை ஒதுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி மகளிர் தினத்தன்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக, 6 அலுவலக ரயில்களில் பெண்களுக்கான ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன.
சமுத்திராதேவி, சாகரிக்கா உள்ளிட்ட 6 அலுவலக ரயில்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், பெண்களுக்காக மாத்திரம் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் எழுந்த பிரச்சினைகள் காரணமாக அந்நடைமுறை கைவிடப்பட்டது.
Related posts:
வெளிநாடுகளில் வசித்து வருவோரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றனவா?
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர்...
எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் - தொடருந்து திணைக்கள...
|
|