யாழ். மத்திய கல்லூரி மாணவர் விடுதி அமைக்க ஜனாதிபதி நிதி வழங்குவதாக உறுதி!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (09) நடைபெற்றது. இதன்போதே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்கள் கல்லூரியின் மாணவர் விடுதி நீண்ட காலமாக புனரமைக்காமல் சேதமடைந்துள்ளதாகவும், அதனை மீள அமைக்க வேண்டிய தேவையுள்ளதால், நிதியுதவி தேவைப்படுவதாக கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கட்டடம் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபா வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
Related posts:
மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
யாழில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் ஆரம்பம் !
நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - நீதி அமைச்சர் தெரிவிப்பு!
|
|