அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்ட 39 இந்தியமீனவர்கள் யாழில் விடுதலை!

Friday, January 6th, 2017

கடந்த வருடத்தில் யாழ் .நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்   39 இந்தியமீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைவாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதவான் எம்.றியாஸ் முன்னிலையில்  இன்று வெள்ளிக்கிழமை(06) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைவாகக் குறித்த மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த மீனவர்களது படகுகள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

C1eaWuvUkAArSFk

Related posts: