யாழ் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர் நிதிப் பங்களிப்பு – உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிசில்!

Friday, January 21st, 2022

யாழ் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கம் வகையில் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது நிதிப்பங்களிப்புடன் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் குறித்த நிகழ்வில் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள குறித்த மாணவர்களுக்காக தலா ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக சுமார் 1.68 மில்லியன் நிதி குறித்த 1987 ஆம் ஆண்டின் உர்தரப் பிரிவு மாணவர்களால் பொன். விபுலானந்தன் ஞாபகார்தமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்குரிய இணைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரவியலாளருமான வித்தியானந்தநேசன் தெரிவித்துள்ளார்..

யாழ் மாவட்டத்தில் தேசிய விளையாட்டுத்துறை பாடசாலையாக பரிணமித்துள்ள மத்திய கல்லூரியின் மாணவர்கள் இம்முறையும் சாதாரண தர பரீட்சையில் அதி சிறப்பு சித்திகளை பெற்று பாடசாலைக்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையப்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் கல்விகற்ற மாணவர்கள் நிதி ஏற்பாடு செய்திருந்தமைக்கு அமைய இம்முறை பரீட்சையில் திறமை சித்திகளை பெற்று மிளிர்ந்த மாணவர்களுக்காக இந்த புலமைப்பரிச்ல் திட்டத்தை வழங்கவுள்ளதுடன் இந்த திட்டம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் இணைப்பாளர் வித்தியானந்தநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் - தாஜ் சமுத்ரா ஹோட்டல் தொடர்பில் விசா...
போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் சதொச ஊடாக இன்றுமுதல் 145 ரூபாவுக்கு அரிசி - வர்ததக அமைச்சு அறிவிப்பு!

இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் – பிரதமர் மஹிந்த உறுதி!
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் – காரணத்தை ...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட பொலிஸார் - இறைச்சியாக்கப்படவிருந்த பல மாடுகள் மீட...