யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று சனிக்கிழமை நண்பகல் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வன்முறைக் கும்பலின் அடாவடியால் அந்த இடத்தில் விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
அனைத்து தேர்தல்களும் கலப்பு மற்றும் விகிதாசார முறையில் இடம்பெறும் - பிரதமர்
மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு - அமைச்சர் ராஜித சேனாரட்ன!
பேருந்து குடை சாய்ந்து விபத்து - 28 பேர் வைத்தியசாலையில்!
|
|