யாழில் ரயில் மோதுண்டு இரு உயிர்கள் பலி மாணவி படுகாயம்!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட பசு மாடுகள் பல மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு வீதியோரத்தில் நின்ற மாணவிமீது மோதுண்டதனால் மாணவி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதில் இரு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கற்கும் துரைசிங்கம் கீர்த்திகா (வயது 15) என்ற மாணவி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related posts:
பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!
அரச பணியாளர்களின் இடமாற்றக் கொள்ளை கல்விச்சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் - கல்வி அமைச்சர்
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரிய...
|
|