மூன்று நாடுகளிடமிருந்து மின்வலுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/04/images-2-2.jpg)
நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்காக பிரித்தானியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து 100 மெகா வோர்ட் மேலதிக மின்வலுவை 06 மாதங்களுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய, பல்லேகல கிரீட் துணை நிலையத்துக்காக 24 மெகா வோர்ட் மின்வலுவையும், காலி கிரிட் துணை பிரிவுக்காக 10 மெகா வோர்ட் மின்சாரத்தையும் 1 கிலோ வோர்ட் 30.20 ரூபாவிற்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் பிரிட்டனின் Aggreko International Project ltd நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
மஹியங்கனை கிரிட் துணை நிறுவனத்திற்காக 10 கிலோ வோர்ட் மின்சாரத்தை 1 கிலோவோர்ட் 30.58 ரூபாவிற்கும் பொலன்னறுவை கிரீட் துணை பிரிவிற்கு 8 மெகாவோர்ட் மின்சாரத்தை 1 கிலோ வோர்ட் 30.63 ரூபாவிற்கும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட் இராஜ்ஜியத்தின் Altaaqa Alterrartive Solution Global FZE என்ற நிறுவனத்துடன் செய்யப்பட உள்ளது.
ஹம்பாந்தோட்டை துணை பிரிவுக்கு 24 மெகா வோர்ட் மன்சாரத்தை, 1 கிலோ மெகாவோர்ட் 28.43 ரூபாவிற்கும் ஹொரண கிரிட் துணை பிரிவுக்கான 24 மெகா வோர்ட் மின்சாரத்தை 1 கிலோ வோர்ட் 28.70 ரூபாவிற்கும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் ஹொங்கொங்கிலுள்ள V Power Holdings Ltd என்ற நிறுவனத்திடம் செய்யப்பட உள்ளது.
மின்வலுவை 6 மாத காலத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
|
|