அனைத்து மத மையங்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவுகளை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில் – துறைசார் அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Saturday, May 20th, 2023

அனைத்து சமய நிலையங்கள் மற்றும் சமய நிறுவனங்களை சட்டமாக பதிவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் பதினைந்து நாட்களில் கொண்டு வரப்படும் என புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ சமய வழிபாடுகளை மேற்கொண்ட மிராக்கிள் டோம் என்ற இடம் குறித்து நடத்திய விசாரணையின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் சமய நிலையமாக பதிவு செய்யப்படவில்லை என கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்

சுமார் 5000 பேர் தங்கக்கூடிய சமய மையமான மிராக்கிள் டோம் அமைப்பதற்கு 2011 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கட்டுநாயக்க சீதுவ நகர சபையின் அனுமதி பெறப்பட்டமையும் விசாரணையின் போது உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் மத நிலையங்களை பதிவு செய்வது கட்டாயமில்லை என்றும், பதிவு செய்யப்படாத பல மத நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் இருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: