முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கு வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய வசதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/01/download-3-1.jpg)
நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அறிவிக்க முடியும். www.slbfe.lk என்ற இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.
பணியாளர்களின் பயணச்சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடுகளை இதன் ஊடாக பதிவேற்ற முடியும். முறைப்பாடு தொடர்பான இலக்கமும் அந்தத் தருணத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மோசடி - நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்...
தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!
தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்...
|
|