முன்னாள் கடற்படை பேச்சாளர் மீண்டும் விளக்கமறியலில்!

Friday, August 25th, 2017

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, இவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, இன்று மீண்டும் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். .

Related posts: