மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, December 4th, 2022

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ‘உள்ளடக்கிய அபிவிருத்திக்கான உருமாற்ற தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமத்துவமான உலகத்தை மாற்றுவதில் புதுமையின் பங்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ‘

சுகாதாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டம் வகுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: