மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகராக முஸம்மில் !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/muzammil-300x300-1.jpg)
மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும் வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது..
இதேவேளை, மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸாரிற்கு பதிலாகவே முஸம்மில் உயர்ஸ்தானிகர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும் மலேசியா கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மகிந்த ராஜபக்ஸவின் எதிர்ப்பாளர்களால் மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார், கடந்த செப்டம்பர் மாதம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் தகவல்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் நுகர்வோர் அதிகாரசபை வர்...
தொடர் மழை: நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
|
|