இன்று தொடக்கம் ஒரு வழிப்பாதையாகும் வேம்படி வீதி!

Wednesday, February 20th, 2019

மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்பாகச் செல்லும் பலாலி வீதி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று தொடக்கம் இந்த ஒரு வழிப்பாதை சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலாலி வீதியில் ஆஸ்பத்திரி வீதிச் சந்திக்கும் முதலாம் குறுக்கு வீதிச் சந்திக்கும் (ஏ-9 வீதியில்) இடைப்பட்ட வீதி இவ்வாறு குறிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரைக்கும் மற்றும் பிற்பகல் 1 மணி தொடக்கம் 2 மணி வரைக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

Related posts:

சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறவில்லை - யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெ...
கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந...
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தகவல்!