பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/02/23-63f537d3d3076.jpg)
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவில் அங்கம் வகிப்பதற்காக தெரிவுக்குழுவினால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 123 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ராதேவி வன்னியாராச்சி, ஹரின் பெர்னாண்டோ, ஜீவன் தொண்டமான், ஷெஹான் சேமசிங்க, தாரக பாலசூரிய, சி.பி.ரத்நாயக்க, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, நாலக கொடஹேவா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜே. சி. அலவத்துவல, சிவஞானம் ஸ்ரீதரன், ஹெக்டர் அப்புஹாமி, அகிலா எல்லாவல வருண லியனகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
போதைப்பொருள் கடத்தல்: 19 குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி?
விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
இலங்கையில் அஸ்ட்ராசெனிகா பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்!
|
|