புலிக்கொடியை ஏந்துவதற்கு மறுப்பு தெரிவித்த வடக்கின் முதல்வர்!

இலண்டனில் புலம்பெயர் அமைப்பால் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கு கிங்ஸ்டன் நகருக்கும் இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் இலண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை, முதல்வரை வரவேற்கும்முகமாக இலண்டன் வாழ் தமிழர்களால் சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.புலிகளின் கொடி ஏந்துவதே குறித்த சந்திப்பின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு புலிகளின் கொடியை ஏந்துவதற்கான ஏற்பாடாக இது இருந்தால் இந்த சந்திப்பில் தான் உரையாற்றப் போவதில்லை என விக்னேஸ்வரன் குறித்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்த பின்னர், அவர்களின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் (ceylontoday) செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
|
|