எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, December 8th, 2022நெல் விலை குறைவடைந்துள்ளமை தொடர்பில், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எப்பாவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று உரக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அவசியமான அரிசியை விநியோகிக்கும் இயலுமை விவசாயிகளுக்கு ஏற்படும்.
எனவே, எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டு யாரும் பெரும்பான்மை பெறாதுவிடத்து வெற்றி யாருக்...
நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி - இன்றும் கூடியது அமைச்சரவை!
மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த த...
|
|