புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச் சீட்டுகள் வழங்கப்படாது – குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 10th, 2024

புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டுகள் வழங்குவதில்லையென குடிவரவு,குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர்: கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பல தசாப்தங்கள் பழமையான, தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது. கடவுச்சீட்டைப் பெறத் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் வர்ண புகைப்படத்துடன் பழைய தேசிய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன .

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளதால், இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளன.

எனவே, புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லையென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: