புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைக்கு தடை!

புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் இடமளிக்கப்படமாட்டாது என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் அபேயவிக்கிரம அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
புகையிரதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதன் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகின்றது.
பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை மற்றும் இடையூறுகள் தொடர்பில் பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புகையிரதசேவை பொதுமக்களின் போக்குவரத்து சேவை வசதிக்காகவே நடத்தப்படுகின்றது . எனவே பயணிகளுக்கு இவ்வாறான சிரமங்களை எதிர்நோக்க இடமளிக்க முடியாது. அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
மிருகக்காட்சிசாலையின் பார்வையாளார்கள் அதிகரிப்பு!
இம்முறை 8,224 மாணவர்களுக்கு 9 பாடங்களில் ஏ!
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இன்னும் உள்ளது -...
|
|