பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் – இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31 ஆம் திகதிமுதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டன.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மா பொதி அயிரத்து 345 ரூபாவிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவி வித்யா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் - இந்தியப்...
ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாண ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
|
|