பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/school-1.jpg)
எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இதன்போது ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.
எனினும் நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறக்கும் திகதி மே மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்பதுடன் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதாரத்துறையினரின் பூரண அனுமதியுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
நாட்டில் இனப்பிரச்சினை இல்லை - தமிழ் அரசியல்வாதிகள் மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் - சர...
|
|