பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் கடன் உதவி !

வரவுள்ளபண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடன் வசதிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
03 பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படவுள்ளன.
- மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உழைப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்
- மாத சம்பளம் அல்லது வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
- மாத சம்பளம் அல்லது வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், கடன் தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இந்தக் கடனை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும்.
நிதி உதவி பெற விரும்பும் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் தலைவரால் சான்றளிக்கப்பட்ட சம்பளப் பட்டியலை வேலை செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த வங்கிக் கிளை ஊழியர்களின் கணக்கில் உடனடியாக அந்தக் கடன் தொகையை வரவு வைக்கும்.
கடனை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாத வட்டி 0.625 சதவீதம். கடன் தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.
அரசு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு கடன் வழங்குவது ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கியில் உள்ளது.
முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள், பாடசாலை வான்கள், பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் தங்கள் வங்கிக் கணக்கு பராமரிக்கப்படும் அரச வங்கியில் தங்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வகையைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் நாள் சம்பளத்துக்கு வேலை செய்வர்களாயின் அரச வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம்- என்றுள்ளது.
000
Related posts:
|
|