நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை – சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/02/download-1-4.jpg)
அண்மை காலமாக நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 28 இலட்சம் பேர் நுண்நிதி கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில் அவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பெண்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பது தொடர்பான துறைசார் கண்காணிப்பு குழுவில், நுண்கடன் நிறுவனங்கள் 38% முதல் 48% வரை அதிக வட்டியில் கடன்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் பெண்கள் வீட்டு வேலைக்குச் சேர்வதும் நுண்கடன் கடன் நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீனவர் பேச்சுவார்த்தைக்கென இலங்கை குழு இந்தியா பயணம்!
வெளிமாவட்டங்களிலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து முற்றாக முடக்கம் - மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அ...
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்ப...
|
|