நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/02/water-bill-1.jpg)
நுகர்வோரிடமிருந்து 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் 6 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ரூபா 721 மில்லியன் வருமானம்!
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்!
சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகார...
|
|