பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்!
Monday, October 3rd, 2016நாட்டிலுள்ள அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ஆம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக ஆசிரியர் தினத்தில் அந்த சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த ...
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத...
யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர்கள் - தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்ப...
|
|