நாடு பிளவுப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் !

Saturday, July 8th, 2017

சுதந்திரத்தை பெற்று கொள்வதற்காக ஒன்று சேர்ந்த நாடு கட்சி, இன, மத, பேதம் காரணமாக பிளவுப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கம்புறுபிட்டிய அக்குருகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுவர்களாகவே இருக்கின்றனர். இன்று மக்கள் கூறுகின்றனர், இந்த நாடு ஆங்கிலயளர்களிடமே இருந்திருக்கலாம் என்கின்றனர். அவர்களிடம் இருந்திருத்தால் நாடு இரண்டு பட்டிருக்காது. தற்போது, கட்சி, அரசியல், மதம், இனம் என்று வேறு பட்டிருக்கின்றனர். இன்று தொலைக்காட்சி பார்த்தால் புரியும். நாளொன்றுக்கு எந்தனை போராட்டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள்இவற்றை பார்க்கும் போது நாட்டில் என்ன நடக்கின்றது என்ற குழப்பநிலை மக்களுக்குத் தோன்றும் என்றும்  இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்

Related posts:

தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமை...
கொரோனா மரணங்களின் உடலங்கள் 48 மணிநேரத்தில் தனியான தீவுகளில் அடக்கம் - இராணுவத்தளபதி தெரிவிப்பு!
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு - பெப்ரவரி இறுதி வரை வாய்ப்பு - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க ...

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள் - வீதி அபிவிருத்...
பல்வேறு வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு முன்னர் சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடியுங்கள் - பொதுச் சுகாதா...
நல்லிணக்கத்தை விரும்பாத தமிழ் கட்சிகள் - அளும் தரப்பின் ஆதரவுடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக...