நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் – பருவபெயர்ச்சி மழையே காரணம் என இந்த த ஹிந்து நாளிதழ் தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/10/download-12-6.jpg)
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் பருவபெயர்ச்சி மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்பதாக குறித்த பயணிகள் கப்பல் சேவை கடந்த 14 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் போதிய முன்பதிவு இன்மையால், இந்த கப்பல் சேவையை வாராந்தம் 3 தினங்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பருவ பெயர்ச்சி மழை காரணமாக குறித்த கப்பல் சேவையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது
000
Related posts:
சம்பந்தனை கொலை செய்ய 25 மில்லியனில் கூலிப்படை: பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு முதல்வர் முறையீடு!
முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது - பாதுகாப்பு அமைச்சு!
மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்தது குமுதினி!
|
|