தொற்று உக்கிர நிலையை அடைந்தபின் நோயாளர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் – இராணுவ தளபதி தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/download-12-1.jpg)
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்ததவுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் நாட்டில் மரணங்களும், நெருக்கடியும் ஏற்படுவதாக இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு படையணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று அதிகாலை இராணுவத் தளபதி விஜயம் செய்தார். இராணுவத் தளபதி தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கோவிட் ஒழிப்பு படையணியை அமைச்சரவை நிர்வகிக்காமல், இராணுவம் நிர்வகிப்பதால்தான் தொற்று ஒழிப்பு செயற்பாடுகள் தோல்வியடைவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டையும் இராணுவத் தளபதி இதன்போது முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன பதிவு அதிகரிப்பு!
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5000 பேர் இணைப்பு!
மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!
|
|
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் - எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு - 100 சந்தேக நபர்கள் அடையாளம் - மூ...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சு...