தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/03/images-1.jpg)
தேர்தல்கள் திணைக்களம் / தேர்தல்கள் ஆணையாளர்” என்ற சொற்றொடர்களுக்கு பதிலாக “தேர்தல் ஆணைக்குழு” என்ற சொற்றொடரை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1955 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்களம், 2015 நவம்பர் 13 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டதை அடுத்து இல்லாதொழிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 49, 03 (ஈ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமறுகால ஏற்பாட்டிற்கமைய, இதுவரை ஏதேனும் ஓர் ஆவணத்தில் “தேர்தல்கள் ஆணையாளர்” மற்றும் “தேர்தல்கள் திணைக்களம்” எனும் சொல்லமைப்புகள் காணப்படுகின்ற ஒவ்வோர் இடத்திலும் அதற்குப் பதிலாக “தேர்தல் ஆணைக்குழு” எனும் சொல்லமைப்பு பதிலீடு செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடுகையில் “தேர்தல் ஆணைக்குழு” என்ற சொற்றொடரை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு சகல ஊடகங்களுக்கும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|