யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் சட்டவிரோதமாக மதுபானம் எடுத்துச் சென்றவர் ஒருவர் கைது

Monday, June 7th, 2021

நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நாடு பூராகவும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மதுவரித் திணைக்களத்தின் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் முச்சக்கர வண்டியொன்றில்  மதுபானத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 300 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ள தோடு அதே இடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின் சட்டநட வடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே குடாநாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறான சட்டவிரோத மதுபான விற்பனைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: