தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி – நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/05/download-1-24.jpg)
பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதுடன், 350 பிரிவுகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்த நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணமும் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவுமாக கட்டணத் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அதிகார பகிர்வு ஆகும் - அமைச்சர் மனோ கணேசன்!
வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின...
பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் இலங்கையில் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார...
|
|