தீவகத்தில் நெற்செய்கையை பாதுகாப்பதற்கு முட்கம்பிகள் – விவசாயத் திணைக்களம் வழங்கியது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/الارز-720x480.jpeg)
கட்டாக்காலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தீவகத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு முட்கம்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்தது..
நெற்செய்கையைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயத் திணைக்கத்தின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 223 முட்கம்பிச் சுருள்கள் கொள்வனவு செய்யப்பட்டன. புங்குடுதீவு கமநல சேவைகள் நிலையத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 விவசாயிகளுக்கு தலா 25கிலோ எடையுடைய 171 முட்கம்பிச் சுருள்கள் வழங்கப்பட்டன. ஏனைய முட்கம்பிச் சுருள்கள் தெரிவு அடிப்படையில் விவசாயிகளுக்கு பகிரப்படும் – என்று விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
Related posts:
பணியாளர்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு 6 மாத கால பொதுமன்னிப்பு!
ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷ...
இலங்கைக்கு மேலதிகமான உதவிகளை வழங்க தயார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவிப்பு!
|
|