திருமலையில் 14 வயது சிறுவர்கள் இருவர் பலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/download-6-11.jpg)
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் உள்ள பரவிபாஞ்சான் குளத்தில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவர்களே இவ்வாறு மரணித்தனர். சடலங்கள் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து அவதானிக்குமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல்!
வித்தியா கொலை தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!
மீண்டும் சர்சையில் மாட்டிய பொலிஸ்மா அதிபர்!
|
|