தபால் மா அதிபரின் அதிரடி : தபால் ஊழியர்களின் நிலை?
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/06/lanka_post-300x200.jpg)
சேவையில் ஈடுபடும் தபால் ஊழியர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.
இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் பணிக்கு திரும்பாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு வாழ்த்தியதுபாக்கிஸ்தான்!
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயனக் கூடங்கள் தொடர்பில் விசாரணை!
ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தீர்மானம் – அமைச்சர் தினேஸ் குணவ...
|
|