தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/12/download-1-1.jpg)
தனியார் பேருந்துகளுக்காக டிசம்பர் மாதம்முதல் இரண்டு வாரங்களுக்கான லொக் சீட் மற்றும் பிரவேச பத்திர கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய சலுகைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவதற்கு பேச்சுவார்த்தை!
மக்களை பாதுகாப்பது யார்? - இராணுவப் பேச்சாளர்!
மாணவர்களின் தொழிற்கல்வியை விஸ்தரிக்க பின்லாந்து உதவி!
|
|