ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் சிவஞானசோதி நியமிப்பு!

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக வே.சிவஞானசோதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றிய வே. சிவஞானசோதி இந்த ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றி வருகின்றார். இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளடங்கலாக 3 உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்!
இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை - வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எ...
|
|