ஜனவரிமுதல் வாகனங்களுக்கான காபன் வரி அறவிடப்படும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/10/images-1-7.jpg)
மோட்டார் வாகனங்களுக்கான காபன் வரியினை எதிர்வரும் ஜனவரி முதல் அறவிடுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன நேற்று(25) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
குறித்த வரியானது மின்சாரத்தினால் செயற்படும் வாகனங்களுக்கு விதியாகாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“நிதிச் சட்டத்திற்கு கீழ் 2018ம் ஆண்டுக்கான வரிச் சட்டங்கள் 06 இற்கான விதி முறைகள் உள்ளன. பங்கு பரிவர்த்தனை வரி நீக்கப்பட்டது. மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யும் போது அதிசொகுசு வாகனங்களுக்கு வரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாளிகைகளுக்கான வரி நீக்கப்படவுள்ளது. மோட்டார் வாகனங்களுக்கான காபன் வரியானது 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறவிடப்படவுள்ளது” என தெரிவித்திருந்தார்.
Related posts:
வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!
மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவு - சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு ச...
முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!
|
|