சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகவுள்ளது – அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/02/download-1-25.jpg)
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கடந்த காலங்களில் பல தடவைகள் கோரி இருக்கிறது. தற்போதும் அந்தவிடயத்தில் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களுடனும் அரசாங்கம் தொடர்பில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்கா முழுவதும் அவசரகாலநிலை பிரகடனம் - அனுமதி வழங்கினார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!
வவுனியாவில் 90 ஏக்கர் குடியேற்றம் செய்வதற்குரிய காணியினை விடுவிக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி ...
சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...
|
|