கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/06/193013250_1875389929309845_5800761831606659187_n.jpg)
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
நாளாந்த கொவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி, நேற்றுமுதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்களின் விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் கதலி வாழைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் - பிரபல சட்டத்தரணி முடியப...
|
|