கொரோனா வைரஸிடமிருந்து இலங்கை தப்பியது எப்படி? – அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/imageproxy-1-1.jpg)
இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற காலநிலையும் ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமகாலத்தில் இலங்கையில் நிலவும் அதிக வெப்ப நிலை மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் அளவை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிகாரிகள் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என மெல்பேர்னை அடிப்படையாக கொண்ட ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வ...
பாடசாலை மாணவருக்கான பருவச் சீட்டு 26 ஆம் திகதிமுதல் வழங்கப்படும் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு...
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!
|
|