கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/09/1630557284-thailand-2.jpg)
இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தாய்லாந்தினால் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
30 பிராணவாயு செறிவூட்டிகள், இரண்டு வென்டிலேட்டர்கள், 108 பிராணவாயு தாங்கிகள் மற்றும் 160 ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்தின் இலங்கை சங்கம், தாய் – ஸ்ரீலங்கா வர்த்தக சபை மற்றும் கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் என்பன இணைந்து இந்த மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி 15 இல் ஸ்தாபிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை!
தபால்மூல வாக்களிப்பிற்கு தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு !
|
|